பெர்மாத்தாங் பாவில் நான்கு-முனை போட்டி

by elecபெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில்  நால்வர்  போட்டியிடுவதாக  தேர்தல்  அதிகாரி  ஜூஸ்னி  இஸ்மாயில்  அறிவித்தார்.

பிகேஆரின்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  அம்னோவின் சுஹாய்மி  சபுடின், பிஆர்எம்-இன் அஸ்மான் ஷா  ஒஸ்மான், சுயேச்சை  வேட்பாளர்  சாலே இஷாக் ஆகியோரே  அந்நால்வருமாவர்.

வேட்பு  மனு  தாக்கல்  சுமூகமாகவே  நடந்தது. மஇகா  தலைவர்  ஜி.பழனிவேலுக்குத்தான்  சிறிது  வருத்தம். கூட்டத்தின்  நெரிசலில்  சிக்கிய  பழனிவேல்  கீழே  விழுந்து  விட்டார். விழுந்ததில் உதடுகளில்  அடிபட்டு  வீங்கி  விட்டன.

“கூட்டத்தில் சிக்கிக்கொண்டபோது  தள்ளிவிடப்பட்டேன். ஆனால், நல்லாத்தான்  இருக்கிறேன்”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்த  போதும்  அவரின்  உதடுகள்  மட்டும்  வீக்கத்துடன் காணப்பட்டன.

இதனிடையே எந்தக்  கட்சிக்கு  எதிராகவும் புகார்கள்  இல்லை  என  பினாங்கு  போலீஸ்  தலைவர்  அப்துல்  ஹனாபி  கூறினார்.