அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு : நூலாக வருகிறது

bookஎதிரணித்  தலைவர் அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்குகளை விவரிக்கும்  நூல்  ஒன்று  நாளை முதல்  கடைகளில் விற்பனைக்கு  வருகிறது.

‘The Prosecution of Anwar Ibrahim: The Final Play ’  என்ற  அந்நூலை  குயின்ஸ்  கவுன்சில்  மார்க் ட்ரோவெல்  எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியரான  ட்ரோவெல்   குதப்புணர்ச்சி வழக்கு II முழுவதையும்  நேரில்  இருந்து  கண்டவர்.

குதப்புணர்ச்சி  வழக்கு  முழுவதும்- முதலாவது குதப்புணர்ச்சி வழக்கு 1998-2004  இரண்டாவது 2008-2012- அந்நூலில்  விவரமாக  விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில்   நீண்ட காலம்  நீதிபதியாக  இருந்து  ஒய்வு  பெற்ற  மைக்கல்  கெர்பி  நூலுக்கு  முன்னுரை  வழங்கியுள்ளார்.

பிகேஆர்  கட்சியின்  நடப்பில்  தலைவரான  அன்வார், ஐந்தாண்டு  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டு  இவ்வாண்டு  பிப்ரவரி  10-இலிருந்து  சுங்கை  பீசி  சிறையில்  இருக்கிறார்.