இப்பொழுது -நந்தினி

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

உண்மையை தேடி பார்த்தேன்
kavithai_09-09-2013picஇப்பொழுது,
நீதி மன்றங்களில் கூட கிடைப்பது இல்லை

காதல் என்ற சொல்
இப்பொழுது,
கல்யாணம் வரை செல்வது இல்லை

தூய்மையான தண்ணீர் நம்
இப்பொழுது,
நீர்நிலையங்களில் கூட இல்லை

தமிழை படிக்க வேண்டும் என்ற எண்ணம்
இப்பொழுது,
அதிகரிக்க வில்லை

பெற்ற குழந்தையை பேணிகாக்க
இப்பொழுது,
பெற்றோருக்கு நேரம் இல்லை

மனிதாபிமானம் என்ற சொல்
இப்பொழுது,
வர்ர்த்தைகளில் கூட இல்லை

அன்னதானம் என்ற வரத்தை
இப்பொழுது,
சமுதாய கூடங்களில் இல்லை

அமைதியை தேட நினைத்தேன் நம்
இப்பொழுது,
இரவிலும் கூட கிடைப்பதில்லை

இப்படி உண்மை, பாசம், தண்ணீர், உழைப்பு, காதல்,

இவை அனைத்தும் குறைந்து கொண்டே போகும் போது …….

இந்த உலகம் மட்டும் எவற்றை நோக்கி நகருகிறது……

-நந்தினி

TAGS: