தேவாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களை மன்னித்தது

churchஒரு வாரத்துக்குமுன்  ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து  தன்  கட்டிடச் சுவரிலிருந்து  சிலுவையை  அகற்றிய பின்னர்  அச்சம்பவம்  பற்றி  இதுவரை  எதுவும் பேசாதிருந்த பெட்டாலிங்  ஜெயா  கம்முனிடி  அப் பிரேய்ஸ் தேவாலயம்  இப்போது  முதல்முறையாக மெளனம்  கலைந்துள்ளது.

தேவாலயத்தின்  மூத்த  பாதிரியார்  பால்  பாக்கியநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களை  “மன்னிக்க”   தேவாலயம்  முடிவு  செய்திருப்பதாகக்  கூறினார்.

ஆனால், அகற்றப்பட்ட  சிலுவை,  அதனிடத்தில்  திரும்பவும் எப்போது பொருத்தப்படும்  என்பதை  அவர்  சொல்லவில்லை.

“இறைவனின்  வழிகாட்டுதலுக்காகக்  காத்திருக்கிறோம்”, என்றாரவர்.