போலீஸ் தொல்லை கொடுப்பதாக பிகேஆர் தேர்தல் பணியாளர்கள் புகார்

leeபெர்மாத்தாங்  பாவ் இடைத்  தேர்தலையொட்டி  பிகேஆர்  அத்தொகுதியில்  செராமாக்கள்  நடத்திவரும்  வேளையில்  போலீசார்  அக்கட்சியின்  தேர்தல் பணியாளர்களை அழைத்து  விசாரணை நடத்துவதாக  மாசாங்  பூபோக்  சட்டமன்ற உறுப்பினர்  லீ  காய்  லூன்  கூறினார்.

“கட்சித்  தொண்டர்களை  விசாரணைக்காக  போலீஸ்  நிலையத்து  வருமாறு  கூறி  போலீஸ்  தொல்லை  கொடுக்கிறது”, என  லீ  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“இது  தேர்தல்  பரப்புரை  காலம். நாங்கள்  செராமாக்கள்  நடத்தவும்  பொது  இடங்களிலும்  காப்பிக்  கடைகளிலும்  வாக்காளர்களைச்  சந்திக்கவும்  அனுமதிக்கப்பட  வேண்டும்”, என்றாரவர்.