தெங்கு ரசாலியே பிரதமராவதற்குத் தகுதி படைத்தவர்: மகாதிருக்கு ஜைட் பரிந்துரை

liபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலகினால் அவரது  இடத்துக்கு  முகைதின்  யாசின்  பொருத்தமான  தேர்வாக  இருக்க  மாட்டார்  என  நினைக்கிறார்  ஜைட்  இப்ராகிம்.

நடப்பு  துணைப்  பிரதமர்  நாட்டைச்  சீர்படுத்துவார்  என்றோ  கடந்த  சில  ஆண்டுகளில்  நஜிப்பால்  நாட்டுக்கு நேர்ந்த  தீங்குகளைக்  கலைவார்  என்றோ முன்னாள்  சட்ட  அமைச்சரான ஜைட்  நம்பவில்லை.

“அவர் 1எம்டிபி  விவகாரத்தை  முடிவுக்குக்  கொண்டுவந்து முழு  விவரங்களையும் அம்பலப்படுத்தி. தவறு  செய்தவர்களை  அவர்கள்  யாராக  இருப்பினும்  தண்டிப்பாரா? அது  நடக்கும்  என  எனக்குத்  தோன்றவில்லை”, என்றாரவர்.

அம்னோவுக்கு  இப்போதிருப்பதைவிட  சிறந்த தலைமைத்துவத்தை  வழங்கவும்  அரசாங்க  அமைப்புகளில்  ஊழலை  ஒழித்து  தரத்தை  மேம்படுத்தவும் பொருத்தமான ஒருவர் தெங்கு  ரசாலி  மட்டுமே  என்று  ஜைட்  தம்  வலைப்பதிவில்  கூறியுள்ளார்.