பாக் லா: நஜிப் வாய் திறந்து பேச வேண்டும்

pa lahநஜிப்  அப்துல்  ரசாக் வாய்திறந்து  பேசாமல்  மெளனமாக  இராமல் முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  குறைகூறல்களுக்கு  எதிர்வினை  ஆற்றத்தான்  வேண்டும்  என்கிறார் முன்னாள்  பிரதமரான  அப்துல்லா  அஹமட் படாவி.

“நஜிப்  ஏதாவது  செய்தாக  வேண்டும். பிரதமராக  இருப்பவருக்கு  மக்களுக்குத்  தகவலளிக்கும் பொறுப்பு  உண்டு”, என இன்று  கோலாலும்பூரில்  இஸ்லாமிய  புரிந்துணர்வுக்  கழகத்தில்  ஒரு  நிகழ்வில்  கலந்துகொண்ட  அப்துல்லா செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நஜிப்  பதவி விலகுவது  நல்லதா,  தொடர்ந்து  இருப்பது  நல்லதா  அல்லது  மகாதிருடன்  நேருக்கு நேர்  மோதிப் பார்ப்பது  நல்லதா  என வினவியதற்கு, “அந்த  முடிவை அவர்தான்  செய்ய  வேண்டும்”, என  அப்துல்லா  கூறினார்.