ஆந்திர சிறையில் தமிழர்கள்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வலியுறுத்தல்

andhra-eyewitness1ஆந்திர சிறையில் உள்ள தமிழர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு வழக்குகளின் கீழும், பொய் வழக்குகளின் கீழும் ஆந்திர சிறையில் தமிழர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும், பொய் வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு இளம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சீனிவாசராவ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சீனிவாசராவ் கூறியது: ஆந்திர சிறையில் 2,500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதனால், அவர்கள் மீதான வழக்கை தமிழகம், ஆந்திரம் அல்லாத வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவே இந்த ஆர்ப்பாட்டம் எனத் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: