உமது வேலையைப் பாரும் என்று சாமிவேலுவை சாடுகிறார் பழனிவேல்

 

samypalaniமஇகாவின் கல்வி பிரிவை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் கூறுகிறார்.

சாமிவேலுக்கு கட்சியின் சட்டதிட்டங்கள் தெரியும். ஆகவே, அவர் எம்இடி மற்றும் எம்ஸ்ட் ஆகிய கல்வி நிலயங்களை அவர் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய பழனிவேல், அவர் ஏன் இன்னும் அவற்றை தம்மிடம் வைத்துக் கொண்டுள்ளார், அவரது நோக்கம் என்ன என்று இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.

தலைவர்கள் வெவ்வேறான தலைமைத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். “அவருக்கு அவரது பாணி இருந்தது; எனக்கு என்னுடைய பாணி இருக்கிறது. இந்நாட்டு இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மையடையச் செய்வதை என்னுடைய வழியில் செய்வதற்கு என்னை அனுமதிப்பதற்கான நேரம் வந்து விட்டது”, என்று பழனிவேல் கூறினார்.