மேலும் கொள்ளையடிக்க வழங்கப் பட்ட ‪‎லைசென்ஸ்‬ -தமிழர் எழுச்சிப்பறை

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

jjசட்டமும் நீதிமன்றமும்‬
‪ஜெயலலிதாவின் ம..ருக்குச்சமம்‬
என்பதை ஜெயலலிதா நிரூபித்து விட்டார்.

‪அடித்தகொள்ளை 35000கோடி‬
‪வழக்குநடந்தது 65கோடிக்கு‬
‪அதுவும் 20ஆண்டுகளாக‬
நடத்தப்பட்ட வழக்கு.

ஜெ.வின் விடுதலை,

மக்களைக் கொள்ளையடிக்கும்MLA,MPக்களுக்கு
மேலும் கொள்ளையடிக்க வழங்கப் பட்ட
‪‎லைசென்ஸ்‬

கொள்ளையை ஊக்கப்படுத்தும்
கிரிமினல்களை வளர்க்கவும் பயன்படும் தீர்ப்பு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்
வாய்மையே வெல்லும்
நீதிமன்றத்தை நம்பலாம்
நீதிபதிகள் நியாயமானவர்கள்.
என்று, எந்த நா..வது உங்களிடம்
அறிவுரை கூறினால் செருப்பால் 
அடித்து விரட்டுங்கள்.

கொலைசெய்வனை விட

கொலைகாரனுக்கு ஆதரவளிப்பவனே
மிகப் பெரிய குற்றவாளி.

கிரிமினல் ஜெயலலிதாவை விட
கிரிமினல் புத்தியால் நீதியை புதைத்த
கிரிமினல் நீதிபதிகளே பயங்கர கிரிமினல் குற்றவாளிகள்.

நீதிமன்றமும் நீதியும்
ஏழையை மிதிக்கும் காலாகத்தான்
பணக்காரனுக்கு செருப்பாகத்தான்
இருக்குமென்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

எதற்கு இந்த நாடகம்?
மக்களை ஏய்க்கவா? வழக்கறிஞர் 
நீதிபதிகளுக்கு வேலை கிடைப்பதற்காகவா? இல்லை
நீதிபதிகளுக்கு பொழுதுபோகவில்லையா?

65கோடி கொள்ளையடித்த வழக்கில்
அரசு செலவழித்தது 20வருடத்தில்
100கோடி இருக்கும்.

ஜெயலலிதா நீதிபதி,வக்கீல் செலவு 
மட்டும் 500கோடியைத் தாண்டும்.

ஜெயலலிதா கொள்ளையடித்ததும்
மக்கள் வரிப்பணம்
அரசு செலவழித்ததும் மக்களின்
வரிப்பணம்.
வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயலலிதா
செலவழித்த 500கோடியும்
மக்களின் வரிப்பணம்.

எந்த வகையில் பார்த்தாலும்
நட்டம் மக்களுக்குத்தான்.
எந்த வகையில் பார்த்தாலும்
முட்டாள் ,நீதிமன்றத்தை நம்புபவன்தான்.

இந்தியாவில் சட்டப்பூர்வ பாசிசம்தான்
ஆள்கிறது என்பதை நிரூபித்த தீர்ப்பு

நீதிதேவன் மயக்கத்திலல்ல
போதையில் கிடக்கிறான் என்பதை
நிரூபித்த தீர்ப்பு.

ஜெயலலிதாவின் செருப்புதான் நீதிமன்றமென்பதை நிரூபித்த தீர்ப்பு.

நீதிமன்றத்தை அப்பாவித்தனமாக நம்பும்

அப்பாவிகளை நீங்கள்

அப்பாவிக்களல்ல முட்டாள்களென்று
நிரூபித்த தீர்ப்பு.

கொள்ளையர்கள் இனி தைரியமாக
கொள்ளையடிக்க வழங்கப்பட்ட
லைசென்ஸ்தான் இந்த தீர்ப்பு.

இந்த நாடு ,கார்ப்பரேட்டுகளுக்கும்
பார்ப்பனர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை நிரூபித்த தீர்ப்பு.

ஆளுங்கட்சி,எதிர்க்கட்சிகள், 
அதிகார வர்க்கம்,நீதித்துறை, பத்திரிக்கைகள்

எல்லாம் சீரழிந்து கிரிமினல் மயமாகியிருப்பதை
தெரிவிக்கும் தீர்ப்பு

-தமிழர் எழுச்சிப்பறை

TAGS: