தேவாலய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் விலங்கிடப்படவில்லை: அரசாங்கம் விளக்கம்

homeஅரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  போலீஸ்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்படும்போது  தாமான்  மேடான் தேவாலயத்தில்  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களிடம்  அதேபோன்று  நடந்து  கொள்ள  வேண்டிய  அவசியமில்லை  என போலீஸ்  நினைத்தது.

ஏனென்றால்  போலீஸ்  நிலையத்துக்கு  அழைத்ததும்  ஆர்ப்பாட்டக்காரர்கள்  வந்தனர். முழுமையாக  வாக்குமூலம்  தந்தனர்  என  உள்துறை  அமைச்சு  கூறியது.

“அதனால்  விசாரணைக்காக அவர்களைக்  கைது செய்யவும்  விலங்கிடவும்  தடுத்து  வைக்கவும்  வேண்டிய  அவசியமில்லாது  போய்விட்டது”. அமைச்சு  நாடாளுமன்றத்தில்  எழுத்துப்பூரவமாக வழங்கிய  பதிலில்  இவ்வாறு  கூறியது.