பதவியைப் பயன்படுத்தி நிலம் வாங்கியதாக கீழ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு அதற்காக 12 மாதச் சிறை விதிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், மேல்முறையீடு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வரவில்லை.
கீரின் முறையீடு மீதான விசாரணை ஜனவரி 19-இல் நடந்தது. இப்போது நான்கு மாதங்களாகி விட்டன.
கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஜெப்ரி டான் கொக் வா பணி ஓய்வு பெற்றிருக்கக் கூடும். அவர் பிறந்தது மே 16, 1949.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது 66.
தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்பட எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் வழக்கு முடிந்த மூன்று மாதங்களில் வாசிக்கப்பட வேண்டும் என்று முன்பே கூறியிருந்தார்.
நீதிமன்ற பட்டியலைச் சோதித்துப் பார்த்ததில் கீரின் வழக்குமீதான தீர்ப்பு இம்மாதம் அறிவிக்கப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
JJ வழக்கு மாதிரிதான்.
தீர்ப்பு வரும் ஆனா வராது….
சட்டம் தன் கடமையை செய்யுமா .
சட்டம் தன் கடமையை செய்யும் ஆனால் செய்யாது!
போடா புண்ணாக்கு மவனே……………..
எல்லாம் இந்தியா போல் தான்– நீ என் முதுகை சொறி நான் உன் முதுகை சொறிகிறேன்
சட்டமாவது வெங்காயமாவது?
சட்டம் பாமர மக்களை தண்டிக்கும் ,,,,,ஆளும் கட்சியின் அரசியல் கொள்ளையர்களை அல்ல ,,,, அவர்களை காக்கும் கவசமாக இருப்பது அதுதானே ,,,,,