மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவின் அலுவலகத்தில் முறையான மேசை நாற்காலி கிடையாது, கழிப்பறைகூட கிடையாது.
இது மக்களவைத் தலைவர் பதவி விலகுவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் பிஎன் எம்பி ஷாரிர் அப்துல் சமட்.
“அதுதான் அவரை அந்த முடிவுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். வேறு விவகாரங்களும் இருக்கலாம்”, என்றாரவர்.
மக்களவைத் தலைவர் என்றால் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கத்தானே வேண்டும் என்றாரவர்.
பண்டிகாரின் பதவி விலகும் முடிவு பற்றிக் கருத்துரைத்தபோது ஷாரிர் இவ்வாறு கூறினார்
மக்களவைத் தலைவருக்கான புதிய அலுவலகத்தில் கழிப்பறை கட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பதவி விலகல் தொடர்பில் பண்டிகார் இன்று பிற்பகல் விளக்கமளித்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தது உண்மை என்றாரவர். ஆனால்,மாற்றங்கள் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்ததும் இவர் முடிவை மாற்றிக் கொண்டார்.
அறிவுக்கு ஒவ்வாத காரண காரியத்தைச் சொல்லி சரீர் தன்னைத் தானே அசிங்கப் படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் சபாநாயகரின் கக்கூஸ் கதையைச் சொல்லி அவரையும் சேர்த்தே அசிங்கப் படுத்துகின்றார். இதெல்லாம் உப்பு ஊருக்காயிக்குக் கூட உதவாத காரணமாக இருக்கின்றது. இந்நாட்டு நாடாளுமன்றத்தையே கேலி கூத்தாக்கி விடாதீர்கள்.
பரயில்லையே,கக்கூஸ் அமைச்சர் நல்லாவே யோசிக்கிறாரு!
பெரியவர்களுக்கு நிறைய pampers இப்பொழுது கிடைக்கும் அதை உபயோகபடுதுங்கள் கூரு கெட்டவன்களே.
இந்த மாதிரியான செய்தியை படிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது.இவர்கள் என்ன மக்களை முட்டாள் கல் என்று நினைத்து விட்டார்களோ.ஒரு முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் கழிவறையை காரணம் காட்டி விலகுவார?இப்படியும் ஒரு எம்பி குருவார் என்றால் என்ன மக்கள் பிரதி நீதி.தவறு நடக்கிறது மக்கள் யோசிக்க வேண்டும்.நெருப்பு இல்லாமல் புகையாது…பொறுத்திருந்து பாப்போம் …
என்ன கொடுமை .
கக்கூஸ் பிரச்சனை.
ஆமாம், ஆபத்து அவசரத்துக்கு அவர் எங்கே போவார்? மாமாக் கடையைத் தேடிக்கொண்டா இருக்க முடியும்? இந்த மாற்றங்களைக் கூட நஜிபைக் கேட்டுத்தானே அவர் செய்ய வேண்டியுள்ளது! பண்டிகார் அமின் நல்ல பண்டிளவைத் தலைவர்!
அன்று வெள்ளை சோறும் கருவாட்டையும் (அப்போது குழம்பு என்றால் என்னவென்று தெரியாத காலம்) சாப்பிட்டபோது, உங்களுக்கு காடுதானே கழிப்பறை. இதெல்லாம் இப்பொழுது உங்களுக்கு ஒரு பெரிய குறையா ? 1940-1950 வாழ்ந்த நிலைமையை நினைத்து பாரும்
சாரிர் சொல்வது உண்மைதான் ,,,, பண்டிகாரன் வேண்டுவது மார்கஸ் பிலிப்பின்ஸ் அதிபர் மாளிகையில் உள்ளதுபோல் ,,,,இருப்பவனுக்கு ,,,இவன் தலைமையிலேயே ஆப்பு வந்துட்ட,,, இவனுக்கும் அது வந்திடுமே என்ற அச்சத்தில் ,,,,இவன் இருந்ததால் அவனுக்கு பாது காப்பு ,,, அதனால் தான் விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை ,,,