‘மரியாதை குறைந்தது அதனால் மகாதிர்-நஜிப் சர்ச்சை மோசமடைந்தது’

Dr-Rais-Yatimஒருவரை  மற்றவர்  மரியாதையாக  சாடுவது  என்ற  வகையில்தான் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான  சர்ச்சை  தொடங்கியது. இப்போது  சேற்றை  வாரி  இறைக்கும்  அளவுக்குச்  சென்று  விட்டது.

மரியாதைப் பண்பு  குறைந்ததுதான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திம்.

மரியாதைப் பண்பு  தலைமைத்துவத்தின்  எல்லா நிலைகளிலும்  கடைப்பிடிக்கப்பட்டிருந்தால்  நஜிப்- மகாதிர் சர்ச்சை  விரிவடைந்திருக்காது.

“மரியாதைப்  பண்பு தலைவர்களுக்கும்  தேவை. நான்  சொல்வது  மகாதிருக்கும்  பிரதமருக்கும்  சங்கடத்தைக்  கொடுக்கலாம்.

“ஆனால், தலைவர்கள் எவ்வளவு  உயரத்தில் இருந்தாலும்   மரியாதையுடன்  நடந்து  கொள்ள  வேண்டும்”என்றாரவர்.

அரசாங்கத்தில்   சமூக, பண்பாட்டு  விவகார  ஆலோசகராகவுள்ள  ரயிஸ், மலாயாப்  பல்கலைக்கழகத்தில் மலாய்  ஆய்வியல்  கழக  விழாவைத்  தொடக்கிவைத்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.