மஇகா: உடைக்கப்பட்ட கோயிலுக்கு சிலாங்கூர் அரசு நிலம் தர வேண்டும்

 

mictempledemolitionசமீபத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) உடைத்த சிறீ மகா மதுரை வீரன் கோயிலுக்கு சிலாங்கூர் அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பக்கத்தான் ரக்யாட் அனைத்து வழிபாட்டுதலங்களுக்கும் நிலம் வழங்க உறுதி அளித்திருந்தது. ஆகவே, இக்கோயிலுக்கு உதவ வேண்டும் என்று மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் அரவிந் கிருஷ்ணன் கூறுகிறார்.

“இது அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது”, என்று அவர் இன்று கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஜாலான் ஹரப்பான், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்திருந்த இக்கோயில் கடந்த மே 13 இல் உடைக்கப்பட்டது.