பின்வாங்கப்போவதில்லை: நஜிப் சூளுரை

najibbதம் கொள்கைகளையும்  ஆட்சிமுறையையும்  போற்றுபவர்  போற்றட்டும்  புழுதிவாரி  தூற்றுபவர்  தூற்றட்டும்  அதற்காக  முன்வைத்த காலைப் பின்னுக்கு  இழுக்கப்போவதில்லை  என்பதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உறுதியாக  இருக்கிறார்.

“அண்மைக்  காலமாக  பலவித  சவால்களும் தடங்கல்களும்  எதிர்பட்டபோதும் அரசாங்கமும்  நானும்  தேர்ந்தெடுத்துள்ள  பாதை  ஒன்றே  ஒன்றுதான் -முன்னோக்கிச் செல்லல்.

“நாங்கள்  திரும்பிப்  பார்க்கப் போவதில்லை”, என  நாடாளுமன்றத்தில் 11வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  பின்னர்  நஜிப்  அறிவித்தார்.

பிரதமர்  தம்  உரையில் முன்னாள்  பிரதமர்  குறைகூறும்  விவகாரங்களையும்  தொட்டுப்  பேசினார்.

“அரசாங்கம்  நேர்மையான  நோக்கத்தில்,  ஒட்டுமொத்த  உதவித் தொகையை  நீக்கிவிட்டு  இலக்குக் குழுக்களுக்கு  1மலேசியா  மக்கள்  உதவித்  தொகை  வழங்க  முடிவு  செய்தபோது   அதை  இந்தப்  பக்கம்  குறை  சொல்கிறாகள்  அந்தப்  பக்கம்  குற்றம்  சாட்டுகிறார்கள்”, என்று  நஜிப்  குறிப்பிட்டதும்  எம்பிகள்  புரிந்து  கொண்டதற்கு  அறிகுறியாக  புன்னகைத்தார்கள்.