1எம்டிபி பற்றி மக்களுக்கு விளக்கமளிக்கும் கடப்பாடு நஜிப்புக்கு உண்டு- அன்வார்

warபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  தொடர்பான  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்று  நீதிமன்றம்  வந்திருந்த  அன்வார்  இப்ராகிம், தம்  மகள்  நூருல் இஸ்ஸா  மூலமாக விடுத்த  அறிக்கையொன்றில், அவ்விவகாரம்  குறித்து  மக்களுக்கு  விளக்கமளிக்கும்  கடப்பாடு  நிதி  அமைச்சருமான  நஜிப்புக்கு  உண்டு  என்றார்.

“பலவீனமான  நிர்வாகத்தின்  காரணமாக  நிகழ்ந்த  கசிவுகளுக்கும்  விரயங்களுக்கும்  அதிகாரமீறல்களுக்கும்  தீர்வு  காணப்பட  வேண்டும்”, என்றாரவர்.