‘பேசாமல் உண்மையைச் சொல்லிடுங்க’-பிரதமருக்கு அம்பிகாவின் இலவச ஆலோசனை

kokபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம் பிம்பத்தை  மேம்படுத்திக்கொள்ள தம்  ஆலோசகர்களை  அதிகம்  நம்பியிருக்கக்  கூடாது  என்று மலேசிய வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கூறுகிறார்.

நஜிப்பைக்  கேலி  செய்யும்  வகையில் டிவிட்டரில்  பதிவிட்டிருக்கும்  அம்பிகா,  பிரதமருக்கு  இலவச ஆலோசனை ஒன்றைத்  தெரிவித்திருந்தார்: ‘பேசாமல்  உண்மையைச்  சொல்லி  விடுங்கள்’.

விளம்பரம், பொது உறவு  ஆகிய  துறைகளில்  பேர்  பெற்றவரான   லிம்  கொக்  விங்,  நஜிப்பின்  சிறப்புத்  திட்ட  ஒருங்கிணைப்பாளராக  நியமிக்கப்பட்டிருப்பதாய் மலேசியன்  இன்சைடரில்  வெளியான  செய்திக்கு  அம்பிகாவின்  எதிர்வினை  இது.