புக்கிட் மெர்தாஜாமில், பின்னிரவு மணி ஒன்றுக்குப் பின்னரும் ஒரு கேளிக்கை மையம் செயல்பட அனுமதித்தது ஏன் என்று பினாங்கு முதலமைச்சர் விளக்கம் வேண்டும் என மலேசிய குற்றக் கண்காணிப்புப் பணிப் படை (மைவாட்ச்) தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அக்கேளிக்கை மையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதால் இக்கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது என்றாரவர்,
“2011-இல் மலாக்கா எதிரணித் தலைவர் டிஏபி கோ லியோங் சான், அங்கு கேளிக்கை மையங்கள் பின்னிரவு மூன்று மணி வரை திறந்திருப்பதற்காக மலாக்கா முதல்வர் அலி ருஸ்தமைக் குறைகூறினார்.
“மாநில அரசு ஆதாயத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறதே தவிர மக்களின் பாதுகாப்புக்கு அல்ல என்று டிஏபி கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இப்போது பினாங்கின் பக்கத்தான் ரக்யாட் அரசாங்கமும் அதையே செய்திருப்பது முரண்நகையாக உள்ளது.
“இதற்கு பினாங்கு அரசாங்கம் என்ன கூறப் போகிறது?”, என்றவர் வினவினார்.
அய்யா உனக்கு நிறைய பேரோட தில்லு முள்ளு,திருட்டு,வஞ்சகம்,அராஜகம் செய்தது எல்லாம் தெரியும்.வச்சிகிட்டு உல மிரட்டல் விடுவ,சூடு வாங்குவ,ஹிரோ ஆயிடுவ.மக்களுக்கு நீ நல்லவர் மாதிரி.ஆனால் உண்மையில் நீயும் அரசியல் லாபம் தேடுற என்பது நிறய பேருக்கு தெரிஞ்சிரிச்சி.பட்டகஷ்டங்களுக்கும். போட்ட காசுக்கும் எங்க போய் தேடுவது.பாது செயிப்பா .
கேளிக்கை மையம் செயல்பட பெர்மிட் வழங்கும் போலிஸ்துறை, மாவட்ட மன்றம், மேலும் சுங்க இலாக்கா ஆகியவையே பொறுப்பு. இவர்களை கேட்க வேண்டிய கேள்வியை முதல் அமைச்சரிடம் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம்!.
ஸ்ரீசஞ்சீவன் ஒரு விபரமான மனிதர். முதலமைச்சரைப் பார்த்து பதில் சொல்லுங்கள் என்று கேட்பாரனால் அதில் ஒரு நியாயம் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போமே!
துப்பாக்கி சூட்டுக்கு பதில் வேண்டுமென்றால் ,மாநில காவல்துறை தலைவரை அல்லவா கேட்க வேண்டும் ?
நாட்டில் சட்டத்தை அமுல் படுத்தும் அதிகாரிகள் உண்மையுடன் இருந்தால் குற்ற செயல்கள் 90 விழுக்காடு குறைந்து விடும்,,,,அனால் அவர்களின் வங்கி கணக்கோ மெலிந்து விடும் ,,,,கிம்பளம் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை டிங்கிரி டிங்கிரி டிங்காலோவாகிவிடும் ,,,,,
அண்மையில் காஜாங் அருகே வளயாங்கட்டிகள் IS தீவிரவாதிகள் என்று குண்டு வைப்பு திட்டத்தில் “கைது…..கைது …” செய்யப்பட்டனர் …ஆனால் மற்ற இனத்தவர்கள் தவறு செய்தால் ‘துப்பாக்கி சூடு மரணம்”….ஏன் வளயாங்கட்டிகள் சுடப்படவில்லை ???…உயிரோடு பிடிபட்டனர் ….சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு தானே…???….
குறை உள்ள திசையை நோக்கி தட்டிக் கேட்பதில் தவறில்லை. எதிர்கட்சிக்காரர்களை நோக்கி கை நீட்டுவதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆளும் தரப்பை நோக்கி கை நீட்டினால், அவர்கள் துப்பாக்கியை நீட்டிவிடுவார்கள். இதுதான் மலேசிய ஜனநாயகம்.
சஞ்சீவன் நாட்டு மக்களுக்கு என்ன தகவல் சொல்ல வருகிறார் ? 12.59 யாராவது சூடு பட்டு இறந்தால் கண்டிக்க மாட்டாரா ?