உயிரிழந்த சொந்தகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு இதனை இனவாதப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
சிலர் இதனை பயன்படுத்தி இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.
வடக்கில் புலிகளுக்காக அஞ்சலி செலுத்தப்படவில்லை.
போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com