அம்னோ அவசரக் கூட்டம் தேவையில்லை- ரீஸால்

reezaமுன்னாள்  தகவல்  அமைச்சர்   சைனுடின்  மைடின்  மொழிந்திருப்பதைப்போன்று   அம்னோ உச்சமன்றம்  அவசரக்  கூட்டம்  நடத்தி கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அதன்  ஆதரவை  உறுதிப்படுத்த வேண்டிய அவ்சியமில்லை.

உச்சமன்ற  உறுப்பினர்  ரீஸால்  மெரைக்கான்  நைனா  முகம்மட்  இவ்வாறு  கூறினார்.

“அவசரக்  கூட்டமெல்லாம்  தேவையில்லை. அம்னோவில் (நஜிப்புக்கு) ஆதரவு  நெருக்கடி  எதுவும்  இல்லை”, என அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பிரதமருமான நஜிப்பை  ஆதரிக்கவில்லை  எந்த  நாடாளுமன்ற  உறுப்பினரோ  உச்சமன்ற  உறுப்பினரோ  இதுவரை  தெரிவித்ததில்லை.

கட்சி  விவகாரங்கள்    பல தலைவர்கள்  கருத்துத்  தெரிவித்துள்ளனர். சிலர்  நயம்பட  உரைத்திருக்கிறார்கள். சிலர் உரத்த  குரலில் விமர்சனம்  செய்கிறார்கள்.

“கருத்து  வேறுபாடுகள்  சகஜம். கருத்துவேறுபாடுகளை  அரவணைத்துச்  செல்ல  வேண்டும்”, என்றாரவர்.