அமைதி காப்பீர்: பங்காளிக்கட்சிகளுக்கு பிகேஆர் வேண்டுகோள்

coolபாஸ்  கட்சியில்  தேர்தல்  நடப்பதையொட்டி  பக்கத்தான்  ரக்யாட்டில்  மூன்று  வாரங்களுக்கு “அமைதி காக்க வேண்டும்”  என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  வலியுறுத்தியுள்ளார்.

“பக்கத்தானைப்  பாதுகாக்க நிலைமையை  ஆறப்போடுவதுதான்  சிறந்த  வழி.

“இரண்டு  மூன்று  வாரங்கள்  அமைதி  காத்து  மக்களின்  எதிர்பார்ப்புகளையும்  அவாக்களையும்  நினைத்துப்  பார்ப்போம்”, என்றாரவர்.

பக்கத்தான் ஒரு  கூட்டணியாக  தொடர்வதையே  மக்கள்  விரும்புகிறார்கள்.

“பாஸ்  தேர்தல்  முடிவுகள்  எப்படி   இருந்தாலும், நாம்  எதற்காக ஒன்றாக  இருக்கிறோம்  என்கிற  பெரிய  நோக்கத்தை  மறந்து விடக்கூடாது”,என ரபிஸி  கூறினார்.

பாஸ்  தேர்தல்கள்  ஜூன்  4-இலிருந்து  6வரை  நடைபெறுகின்றன.  அதில் அப்துல் ஹாடி  ஆவாங்  மிகப்  பெரிய  வெற்றி பெறுவார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல்  ஹாடியின்  கொள்கைகள்  அண்மையில்  டிஏபி,  பிகேஆர்  ஆகியவற்றின்  குறைகூறலுக்கு  இலக்காகியுள்ளன.