குடியேறிகளின் கொலையில் மலேசிய அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம்

migதாய்லாந்து- மலேசிய  எல்லையில்  புதைக்கப்பட்டிருக்கும்  நூறுக்கு  மேற்பட்டவர்களின்  இறப்புக்கு  மலேசியா  அமலாக்க  அதிகாரிகள்  உடந்தையாக  இருந்திருக்கலாம்  அல்லது  பொறுப்பாளர்களாகவும்கூட  இருக்கலாம் என  உள்துறை  அமைச்சு  சந்தேகிக்கிறது.

மலேசிய  அதிகாரிகள்  குடியேறிகளைக்  கொன்றிருக்கும்  சாத்தியம்  அல்லது  அவர்களின்   மரணத்துக்குக்  காரணமாக  இருக்கும்  சாத்தியம்  உண்டா  என்று  வினவப்பட்டதற்கு “உண்டு” என்று  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

“இன்னும்  ஆய்வு  செய்து  கொண்டிருக்கிறோம். எந்தச்  சாத்தியத்தையும்  மறுப்பதற்கில்லை”,என  ஜாஹிட்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.