ஐ.எஸ் தீவிரவாதிகளின் காமவெறி ஆட்டம்: ஐ.நா சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

isis_burns_woman_001இயற்கைக்கு எதிரான உறவிற்கு மறுப்பு தெரிவித்த யாசிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொன்றுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள யாசிதி இனத்தை சேர்ந்த சிறுமிகள் மட்டும் பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஐ.நா சபை அதிகாரியான Zainab Bangura தெரிவித்துள்ளார்.

யாசிதி சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களின் கன்னித்தன்மையை கொடூரமான முறையில் சோதிக்கிறார்கள்.

சிறுமிகளும், பெண்களும் சுத்தமானவர்கள் என நிரூபனம் ஆனவுடன், அவர்களை அடிமைகள் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ளவர்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறார்கள்.

விலைக்கு வாங்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் கைகளில் தங்களின் பெயர்களை எழுதி ‘இவர்கள் தங்களுக்கு மட்டும் உரிமையானவர்கள்’ என தீர்மானிக்கிறார்கள்.

பின்னர், இவர்களை முதலில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள், நடுநிலை அதிகாரிகள், இறுதியாக போர் வீரர்களிடம் அனுப்பப்பட்டு பலவந்தமாக பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய Zainab Bangura, இயற்கைக்கு எதிரான அதீத பாலியல் உல்லாசத்திற்கு மறுத்த பெண் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது என்றார்.

இவ்வாறு சிறுமிகள் மற்றும் பெண்களை விலைக்கு வாங்கும் தீவிரவாதிகள் அவர்களை 3 மாதத்திற்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு மீண்டும் மற்றவர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

சிரியாவில் உள்ள Ragga நகரில் யாசிதி சமூகத்தை சேர்ந்த அழகான சிறுமிகள் மற்றும் பெண்கள் நாள்தோறும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ள அவல நிலை நீடித்து வருகிறது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com