அரசாங்கம் தாயிப்புக்கு ரோல்ஸ்-ரோய்ஸ் கார் வாங்கிக் கொடுக்கவில்லை

rollsசரவாக்  ஆளுனர்  அப்துல்  தாயிப்  மஹ்மூட்  பயன்படுத்தும்  2012 ரோல்ஸ்-ரோய்ஸ்  ஃபெண்டம் கார்  அரசாங்கம்  வாங்கிக்  கொடுத்தது  அல்ல  என  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்  கூறினார்.

ரிம3.7மில்லியன்  மதிப்புள்ள  அக்காருக்கு  அரசாங்கம்  பணம்  கொடுக்கவில்லை..

சரவாக்  ரிப்போர்ட்-டில்  வெளிவந்துள்ள   செய்தி  பற்றிக்  கேட்டதற்கு, “அது  எனக்கே  ஒரு  புதிய  செய்திதான்”,  என்று  ஷஹிடான்  தெரிவித்தார்.

ஆளுனர்கள்  பயன்படுத்துவதற்காக  அரசாங்கம்  ரோல்ஸ்  ரோய்ஸ்  கார்கள்  வைத்திருப்பதாகக்  கூறப்படுவதை  அவர் மறுத்தார்.

“எனக்குத்  தெரிந்தவரை அப்படி எதுவும்  இல்லை”, என்றாரவர்.

பிபிபி கட்சியின்  உதவித்  தலைவர் ஹஸ்பி  ஹபிபுல்லாவிடம்  கேட்டதற்கு  அது பற்றிக்  கருத்துரைக்க  அவர்  விரும்பவில்லை. கூச்சிங்கில்,  தாயிப்பின் வீட்டில்  ரோல்ஸ்-ரோய்ஸ்  காரை  எதையும்  கண்டதுண்டா  என்ற  கேள்விக்கும்  அவர்  பதிலளிக்க  மறுத்தார். தாயிப்  பிபிபி கட்சியின்  முன்னாள்  தலைவர்.