ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலுக்கு பலியானவர்கள் – 1100 பேர்

telenganaஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 269 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 852 அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே வெயிலுக்கு இவ்விரு மாநிலங்களில் தான் அதிகமானவர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது.

இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ கடந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. தொழிலளர்கள் குறிப்பாக காலை 11.30 முதல் மாலை 4 வரை வேலை செய்ய வேண்டாம் என ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் அறிவுறித்தியுள்ளன.   இவ்விரு மநிலங்களையும் தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெயிலுக்கு மொத்தமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.

-http://www.nakkheeran.in

TAGS: