ஷாபி: 1எம்டிபி பற்றி அமைச்சரவையில் கேள்வி கேட்டது உண்டு

shafபுறநகர், வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  ஷாபி  அப்டால்,  1எம்டிபி  விவகாரத்துக்கு  அமைச்சரவை  மொத்தமும்  பொறுப்பேற்க  வேண்டும்  என்று  கூறப்படுவதை  நிராகரித்தார்.

அமைச்சரவைக்  கூட்டங்களில்  அமைச்சர்கள்  1எம்டிபி  பற்றிக்  கேள்வி  கேட்கத்  தவறியதில்லை   என்று  ஷாபி  கூறினார்.

“நாங்கள்  பொறுப்பான  அமைச்சர்கள். அதனால்தான்  கேள்வி  கேட்டோம்….. எங்களுக்கும்  தெரிந்து  கொள்வதில்  ஆர்வம்  இருந்தது”.

அந்நிறுவனம்  தொடர்பில்  சில  விவகாரங்கள்  அமைச்சரவைக்கே  புரியவில்லை  என்றாரவர்.

“எங்களுக்குச்  சரியாக  புரியாத  ஒன்றுக்காக  எங்களைக்  குறை  சொல்லக்கூடாது”, என்றார்.

1எம்டிபி  பிரச்னைகளுக்கு  அமைச்சரவை  மொத்தமும் பொறுப்பு  என்று  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு  ரசாலி  ஹம்சா  கூறியிருப்பது  பற்றிக் கருத்துரைத்தபோது  ஷாபி  இவ்வாறு  கூறினார்.