மகாதிர்: வரிக்காக என்னை விரட்டினார்கள், பணக்காரர்களை விட்டு விட்டார்கள்

lhdமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  முன்பு தாம்  மருத்துவராக  தொழில் புரிந்தபோது  உள்நாட்டு வருமான  வரி  வாரியத்தின்  அதிரடிச்  சோதனைகளுக்கு  அடிக்கடி  ஆளானதாகவும்  இன்றோ  பெரும்  பணக்காரர்களாக  திகழும்  அமைச்சர்களோ  சுதந்திரமாக  திரிகிறார்கள்  என்றும்  அங்கலாய்த்துக்  கொண்டிருக்கிறார்.

“அரசாங்க  அதிகாரிகள்  வருமானத்தைமீறிய  வாழ்க்கை  வாழ்ந்தால்  வருமான  வரி  வாரியத்தின்  விசாரணைக்கு  ஆளாவர்கள்.

“ஆனால், அமைச்சர்கள்  அல்லது  தனிப்பட்ட  மக்கள்  ஆடம்பரமான  வாழ்க்கை  வாழ்ந்தால்  எந்த  விசாரணையும்  நடப்பதில்லை”, என்று மகாதிர்  தம்  வலைப்பதிவில்  பதிவிட்டிருக்கிறார்.