1எம்டிபி: பண்டிகார் நஜிப்பை வழிக்குக் கொண்டுவர வேண்டும்

kitமக்களவைத்  தலைவர் பண்டிகார்  அமின்  மூலியா,  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத்  தவிர்க்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை   அடக்கி வழிக்குக்  கொண்டுவர  வேண்டும்.

நாடாளுமன்றச்  சீரமைப்புப்  பற்றிப்  பேசும்   பண்டிகார்  இவ்விவகாரத்தில்    முடிவெடுக்க வேண்டும்  என்று  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

“பண்டிகார்  தலையிட்டு  1எம்டிபி-இன் ரிம42 பில்லியன்  ரிங்கிட்  ஊழல் தொடர்பான  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத்  தவிர்க்கும்  பிரதமர்  நாடாளுமன்ற  நிலை  ஆணைகளை  மீறினாரா  என்று  தீர்ப்பளிக்க  வேண்டும். அப்படிச்  செய்தால்  அதுவே  மலேசியாவில் நாடாளுமன்றச்  சீரமைப்பை நோக்கி  எடுத்து  வைக்கப்படும்  முதல்  அடியாக  இருக்கும்”, என்று  லிம்  ஓர்  அறிக்கைப்யில்  கூறினார்.