ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொருவரும் நாடு கடத்தப்படுகிறார்

dootமலேசிய  குடிநுழைவுத்  துறை, ஹாங்காங்கைச் சேர்ந்த  இன்னொரு  ஜனநாயக-ஆதரவு  ஆர்வலர்  ஒருவரையும் நாடு  கடத்த  ஏற்பாடு  செய்து  வருகிறது.

ஹாங்காங்  சட்டமன்ற உறுப்பினரான  லியோங்  குவொக்-ஹங்  இன்று  பிற்பகல்  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையம்  வந்து  இறங்கியதுமே தடுத்து  வைக்கப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயாவில்  ஒரு  கருத்தரங்கில்  கலந்துகொள்ள  வந்த  லியோங்  தம்  நிலைமையை  விளக்கி  ஏற்பாட்டாளர்களுக்குக்  குறுஞ்செய்தி  அனுப்பி  வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, ஹாங்காங்கைச்  சேர்ந்த  ஜோசுவா  வொங்  பினாங்கு  விமான  நிலையம்  வந்திறங்கியதுமே  தடுக்கப்பட்டுத்  திருப்பி  அனுப்பப்பட்டார்.

சீனாவில் திருப்திப்படுத்தவே  இந்த  நாடுகடத்தல்கள்   நடத்தப்படுவதாக  ஊகங்கள்  பெருகி  வருகின்றன.

அவ்விருவரும்  இன்றிரவு  தியானான்மென்  படுகொலையின்  26ஆம்  ஆண்டு  நிறைவையொட்டி  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள ஒரு  நிகழ்வில்  உரையாற்றுவதாக  இருந்தது.

இருவருமே ஹாங்காங்  குடைப்புரட்சி  இயக்கத்தில்  முக்கியமானவர்கள்.  அந்த இயக்கம்  2017 தலைமை  செயல்  அதிகாரிக்கான  தேர்தலில்  போட்டியிடும்  வேட்பாளர்களின்  பின்னணியை ஆராய  வேண்டுமென்ற  பெய்ஜிங்கின்  முடிவுக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  வருகிறது.