பழனிவேல் மஇகா உறுப்பினர் அல்ல: ஆர்ஓஎஸ் அறிவிப்பு

rosசங்கங்கள்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) ஜி.பழனிவேல் இனியும்  ஒரு மஇகா உறுப்பினர்  அல்ல  என்றும்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமே  அக்கட்சியின்  இடைக்காலத்  தலைவர்  என்றும்  அறிவித்துள்ளது.

2009-இல்  தேர்ந்தெடுக்கப்பட்ட  மத்திய செயல்குழு(CWC)வுக்கு   அனுப்பிய  கடிதத்தில்  ஆர்ஓஎஸ்  இவ்வாறு  தெரிவித்தது. 2009 மத்திய  செயல்குழுவினரையே   சட்டப்படி  பொறுப்பாளர்களாக  ஆர்ஓஎஸ்  மதிக்கிறது.

CWC-க்குத்  தலைமை ஏற்று  கட்சித்  தலைமையைத்  தேர்ந்தெடுக்க  புதிய  தேர்தலை  நடத்தும்  அதிகாரம்  சுப்ரமணியத்துக்கு  உண்டு  என்றும் அக்கடிதம்  கூறிற்று