ஆர்ஓஎஸ்-ஸின் பைபிள் கழகச் சோதனை ஒத்திவைப்பு

mbsசங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), இன்று  மலேசிய  பைபிள்  கழக(பிஎஸ்எம்)த்துக்கு மேற்கொள்ளவிருந்த  வருகையை  ஒத்தித்துள்ளது. வருகை  ஒத்திவைக்கப்பட்டதற்கான  காரணத்தை  அது  தெரிவிக்கவில்லை.

ஆர்ஓஎஸ்  நடவடிக்கை  ஒத்திவைக்கப்பட்ட  செய்தி  இன்று  காலை  தொலைபேசிவழி  தெரிவிக்கப்பட்டதாக  பிஎஸ்எம்  செயலாளர்  ரெவரெண்ட் மெத்தியு  கே. புன்னூஸ் கூறினார்.

ஆர்ஓஎஸ் இன்று  பிஎஸ்எம்-மைச்  சோதனையிட வருவதாக  நேற்று  மின்னஞ்சல்  செய்தி  ஒன்றை  அனுப்பி  இருந்தது. அதனை  அடுத்து  ஆர்ஓஎஸ்  அந்தக்  கிறிஸ்துவக் கழகத்தை  மிரட்டும்  நடவடிக்கையில் ஈடுபடுவதாக  பொதுமக்களில்  பலரும்  சாடியிருந்தனர்.

இதெல்லாம்  “வழக்கமான  நடவடிக்கைதான்”  என்றும்  “சந்தேகப்படுவதற்கு  ஏதுமில்லை”  என்றும்  ஆர்ஓஎஸ்  தெரிவித்ததாக  மலாய்  மெயில்  ஆன்லைன்  நேற்று  அறிவித்திருந்தது.