சிலாங்கூரின் மூன்று நகரங்களில் இலவச பேருந்து சேவை

busசிலாங்கூர்  அரசு,  அம்மாநிலத்தின்  மூன்று  நகரங்களில்- ஷா ஆலம், கிள்ளான், சுபாங்  ஜெயா ஆகியவற்றில்- இலவச  பேருந்து  சேவையைத்  தொடக்கியுள்ளது.

“இலவச  பேருந்து சேவை  வழங்கும்  முதல்  மாநிலம்  சிலாங்கூர்தான்”,என  சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  தெங்  சாங்  கிம், ஷா  ஆலமில்  அச்சேவையைத் தொடக்கிவைத்தபோது  கூறினார்.

காலை 6மணிக்குத்  தொடங்கி  இரவு  மணி 10வரை  அச்சேவை  நடைபெறும். 15நிமிட  இடைவேளையில் ஒரு  பேருந்து  வரும்  போகும்.

இலவச  பேருந்து  சேவையை  விரிவுபடுத்தும்  திட்டங்களும்  உண்டு. அடுத்தபடியாக  காஜாங்கிலும்  அம்பாங்  ஜெயாவிலும்  அச்சேவை  தொடங்கும்.

“அது அடுத்த  ஆண்டுக்குத்  திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், முடிந்தால்  இவ்வாண்டிலேயே  தொடங்குவோம்”, என  தெங்  குறிப்பிட்டார்.