ஜூலை 29 ரபிஸி ரம்லிமீது முடிவெடுக்கும் நாளாகும்

caseபெட்டாலிங்  ஜெயா  செஷன்ஸ்  நீதிமன்றம்,  அம்னோ  உறுப்பினர்களை  வேண்டுமென்றே  பழித்துரைத்தார்  என்று  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி ரம்லியை  எதிர்வாதம்  செய்ய  அழைப்பதா  என்பதை  ஜூலை  29-இல்  முடிவு  செய்யும்.

அவ்விவகாரம்  தொடர்பில்  அரசுத்தரப்பின்  வாதத்  தொகுப்பைச்  செவிமடுத்த  நீதிபதி  அஸ்வரிண்டா  அவ்வண்டி  பாண்டான்  எம்பி-யும்  பிகேஆர் தலைமைச்  செயலாளருமான ரபிஸியை  எதிர்வாதம்  செய்ய  அழைப்பது  பற்றி  ஜூலை  29-இல்  முடிவு  தெரிவிப்பதாகக் கூறினார்.