போரில் காணாமற்போனவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் ஐ.நாவில் வெளியிடவுள்ளதாம் சிறிலங்கா!

ajeth_pereraகடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெறும் போது, சிறிலங்கா அரசதரப்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்களில் இந்த விபரங்களும் இடம்பெறும் என்று அவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பிரச்சினையை உணர்ந்துள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்புகிறது.

என்றாலும், பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், அந்தத் தகவல்களை உடனடியாக வெளியிட முடியாமல் உள்ளது.

காணாமற்போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் நியாயமானவையே என்பதை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக அறிந்துள்ளது.

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்ட தகவல்களும் உள்ளன.

இது தொடர்பான விபரங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: