WSJ:1எம்டிபி பணம் பிரதமர் கணக்குக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது

wsjவால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ) மற்றுமொரு  பரபரப்பான  செய்தியை  இன்று  வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கில்  வரவு வைக்கப்பட்டிருப்பதை  மலேசிய  புலனாய்வு  அதிகாரிகள்  கண்டுபிடித்திருப்பதாக  அச்செய்தி கூறிற்று.

அரசாங்கப்  புலனாய்வு  ஆவணங்களை  வைத்து WSJ  இவ்வாறு கூறியது.

அந்த  ஆவணங்கள்  முதன்முறையாக  நஜிப்புக்கும்  அரசாங்க  முதலீட்டு  நிறுவனமான 1எம்டிபிக்கும்  நேரடித்  தொடர்பு இருப்பதைக்  காண்பிப்பதாக  அந்த  நாளேடு  தெரிவித்தது.

“பணம்  அரசாங்க  நிறுவனங்கள், வங்கிகள், 1எம்டிபி-யுடன்  தொடர்பு  கொண்ட  பல  நிறுவனங்களுக்குச்  சென்று முடிவில்  நஜிப்பின் கணக்கைச்  சென்றடைந்ததாக புலனாய்வு  அதிகாரிகள்  நம்புகிறார்கள்”, என   WSJ  கூறியது.