WSJமீது பாய்ந்தார் அமைச்சர்

rahநகர்ப்புற  நல்வாழ்வு,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான், 1எம்டிபி- இலிருந்து  கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக  செய்தி  வெளியிட்ட வால்  ஸ்திரிட்  ஜர்னல்  ஆசியா(WSJA)-வைக்  கடிந்து  கொண்டார்.

அனைத்துலக  அளவில்  பேர்பெற்ற  செய்தித்தாளான  அது  தனக்கு  அத்தகவல்  எங்கிருந்து  கிடைத்தது  என்பதைத்  தெரிவிக்காததற்காக அமைச்சர்  அதைச்  சாடினார்.

“WSJA தீய  நோக்குடன்  சுமத்தியுள்ள  அக்குற்றச்சாட்டைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்தேன். அது  உண்மை  என்றால்  செய்திக்கான  மூலத்தையும்  அது  தெரியப்படுத்தியிருக்க  வேண்டும்

“பெயர் குறிப்பிட  விரும்பாத  விசாரணையாளரை  மேற்கோள்  காட்டி அந்த  அவதூறு  அறிக்கையை  வெளியிட்டதன்வழி சரவாக்  ரிப்போர்ட்-டின்  சாக்கடை  இதழியல் அளவுக்கு AWSJ  தரம்  தாழ்ந்து   போயுள்ளது”, என  ரஹ்மான்  டிவிட்டரில்  கூறினார்.