குவான் எங் ‘இனவாத மூதாட்டிக்கு’ரிம500ஆயிரம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

grannyபினாங்கு எதிரணித்  தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட், தம்மை “இனவாத பாட்டி” என அழைத்ததற்காக  முதலமைச்சர்  லிம் குவான் எங் மீது தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்.

லிம்  இழப்பீடாக ரிம500,000-மும்  வழக்கு தொகையான ரிம40,000-மும்  கொடுக்க வேண்டும் என நீதி ஆணையர் நோர்டின் ஹசான்  தீர்ப்பளித்தார்.

டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம்  மீண்டும்  அதே  போன்ற  தவற்றைச்  செய்யக்கூடாது என்றும்  நீதி  ஆணையர்  உத்தரவிட்டார்.

இன்று, செபராங் பிறையில்  செய்தியாளர்களிடம்  பேசிய  லிம், “வழக்குரைஞர்கள்  மேல்முறையீடு  செய்யும்படி  அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் பரிந்துரையை  ஏற்றுக்கொண்டேன்”, என்றார்.