‘என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்’-ஆதரவாளர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

anwarசிறையில்  உள்ள  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தம்  ஆதரவாளர்கள்  தம்மைப்  பற்றிக்  கவலைப்படுவதை  விரும்பவில்லை.

“உங்களுக்கு  நன்றி.  ஆனால்,  என்னைப்  பற்றிக்  கவலைப்படாதீர்கள். இன்ஷாஅல்லா, நான்  நன்றாக  இருக்கிறேன். ரமலான்  மாதக்  கடமைகளைச்  செய்வதில்  கவனம்  செலுத்துமாறு  நண்பர்களைக்  கேட்டுக்கொள்கிறேன்.

“நிறைய  தொழுங்கள். விலைவாசி  உயர்வை,  அதுவும்  ஹரி  ராயா  வரும்  இந்த  நேரத்தில்,  சமாளிப்பது  எப்படி  என்பதில்  கவனம்  வையுங்கள்”. சுங்கை  பூலோ  சிறையில்  உள்ள  அன்வாரிடம்  எப்படி  இருக்கிறீர்கள்  என்று  வினவப்பட்டதற்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

அவரது  பதில்  அவரது  முகநூல்  பக்கத்தில்  பதிவிடப்பட்டிருந்தது. #ApaKhabarAnwar (எப்படி  இருக்கிறீர்கள், அன்வார்)  என்ற  தலைப்பில்  தொடங்கப்பட்டிருக்கும்  ஓர்  இயக்கத்துக்காக  அவர்  இந்தப்  பதிலை  அளித்திருந்தார்.

அன்வாரின்  உடல்நிலை  குறித்து  அவரின்  குடும்பத்தார்  கவலை  தெரிவித்திருப்பதை  அடுத்து  இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.