பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபி-இன் பணம் யுஎஸ்$700 மில்லியன் அவருடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறிய வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு (WSJ) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நஜிப்பின் அரசியல் செயலாளர் முகம்மட் கைருன் ஆசே உறுதிப்படுத்தியதாக சினார் ஹரியான் செய்தி ஒன்று கூறியது.
WSJ செய்தி தீய நோக்கம் கொண்டது, அதன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அது குறிப்பிடும் மூலங்களும் சந்தேகத்துக்குரியவை என்று முகம்மட் குறிப்பிட்டார்.
“நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்”, என்றாரவர்.
அரசியலில் இது சகஜமப்பா! நடவடிக்கை எடுக்கணும்னா மானம், ரோஷம் இதெல்லாம் வேணும்!
எங்கள் நாட்டின் அன்புக்கும் பாசத்துக்கும்,நேசத்துக்கும்