தீர்ப்பை நிறுத்திவைக்க பழனிவேல் செய்த மனு தள்ளுபடி

palமறுதேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற  சங்கப்  பதிவகத்தின்  உத்தரவை  நிலைநிறுத்தும்  நீதிமன்றத்  தீர்ப்பை நிறுத்திவைக்கக்  கோரி ஜி.பழனிவேலும்  மேலும்  மூவரும் செய்திருந்த  மனுவை  இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

நீதிபது  அஸ்மாபி  முகம்மட்  அவரது  அறையில்  இம்முடிவைச்  செய்தார்.

இன்னமும்  தம்மை  மஇகா  தலைவர்  என்று  அழைத்துக்  கொள்ளும் பழனிவேலும்  எஸ். சோதிநாதன், எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள்  கட்சித்  தலைலைச்  செயலாளர்  ஏ.பிரகாஷ்  ராவ்  ஆகிய  மூவரும் செலவுத்  தொகையாக  ரிம 5,000  கொடுக்க  வேண்டும்  எனவும்  நீதிபதி  உத்தரவிட்டிருப்பதாக  அரசுத்  தரப்பு  வழக்குரைஞர்  அமர்ஜித்  சிங்  ஊடகங்களிடம்  தெரிவித்தார்.