ரசாக் உருவாக்கிய பெல்டாவை அவரின் மகன் அழித்துக் கொண்டிருக்கிறார்

feldaபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அவரின்  தந்தையார்  அப்துல்  ரசாக் உசேன்  உருவாக்கிய  பெல்டாவை  அழித்துக்  கொண்டிருக்கிறார்.

இன்று  மகாதிரைச்  சந்தித்தபோது  அவர்  இவ்வாறு  குறிப்பிட்டதாக அனாக்  தலைவர்  மஸ்லான்  அலிமான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“நஜிப்  ஒழுக்கக்கேடு மிக்க  ஒருவரை  பெல்டா  தலைவராக  நியமித்தது  ஏன்  என்று  மகாதிர்  வினவினார்.

“அப்துல்  ரசாக்  அரும்பாடு  பட்டு  பெல்டாவை உருவாக்கினார். ஆனால், நஜிப்  அதற்கு  நேர்  எதிரான  வேலையைச்  செய்து வருகிறார்  என்றாரவர்”, என  மஸ்லான்  கூறினார்.

2004  கட்சித்  தேர்தலில்  பண அரசியலில்  ஈடுபட்டதற்காக  மூன்றாண்டுகளுக்கு  அம்னோவிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்ட  இசா  சமட்டை பெல்டா  தலைவராக  நியமித்ததைத்தான்  மகாதிர்  குறிப்பிடுகிறார்.