நாட்டைப் பீடிக்கும் நோய்களைக் குணப்படுத்த வேண்டும்: டாக்டர் மகாதிரின் பிறந்த நாள் விருப்பம்

mahathir mosஇன்று  90வது  பிறந்த நாளைக்  கொண்டாடும்  டாக்டர் மகாதிர்  முகம்மட் இவ்வளவு  காலம்  வாழ்வதை  நினைத்துக்கூட பார்த்ததில்லை  என்றார்.

“90வது  பிறந்த  நாளைக் கொண்டாட  முடிந்ததற்கு  நன்றி தெரிவிக்கிறேன்”, எனப்  புன்னகைத்தார்.

“இது  நான்  எதிர்பார்க்காத  ஒன்று”, என  மகாதிர் தேசிய பள்ளிவாசலில்   சந்தித்த  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அவரது  பிறந்த நாள்  விருப்பத்தைக்  கேட்டதற்கு, “உடலில்  அசைவு  இருக்கும்வரை  நாட்டின்  பிரச்னைகளைத்  தீர்ப்பதில்  தொடர்ந்து  ஈடுபட்டிருக்க  வேண்டும்”, என்றார்.

மகாதிர்  அவரின்  மகன்கள்  இருவருடன் -கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ், மொக்சானி  ஆகியோருடனும்  இரண்டு  பேரப்  பிள்ளைகளுடனும்  பள்ளிவாசலுக்கு  வந்திருந்தார்.

மொக்சானி,  பள்ளிவாசலில்  அதுவும்  தந்தையின்  பிறந்த  நாளில்  அரசியல்  கேள்விகள்  வேண்டாம்  என  மலேசியாகினியைக்  கேட்டுக்கொண்டார்.

எப்போதும்போல்  மகாதிரை  சுற்றி  ஒரு   கூட்டம். எல்லாருக்கும் கை  கொடுத்தார். சேர்ந்து  படமெடுத்துக்  கொண்டார்.

“எல்லாரும்  அவர்களின்  90வது  பிறந்த  நாளைக்  கொண்டாட வேண்டும்”, என்றும்  வாழ்த்தினார்.