தகவல் சொல்லும்போது அடக்கி வாசியுங்கள், பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார் ஐஜிபி

protectதகவல் சொல்பவர்களுக்குப்   பாதுகாப்பு  தேவை  என்றால் , தகவல்களை  எங்கு  சொல்ல  வேண்டுமோ  அங்கு  சொல்ல  வேண்டும்,  ஊடகங்களில்  வெளியிடும்  வேலை  கூடாது  எனப் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறுகிறார்.

“மலேசிய  சட்டத்தில்  தகவல் சொல்பவர்களுக்குப்  பாதுகாப்பு  உண்டு. அவர்கள் முறைப்படி, சட்டப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்.

“உண்மையிலேயே  தகவல்  சொல்பவர்களை அரச  மலேசிய  போலீஸ்  வரவேற்கிறது”, என்று  காலிட்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

தகவலை ஊடகங்களில்  வெளியிட்டு  தம்பட்டம்  அடித்துக்கொள்ளும்போதுதான் குழப்பமெல்லாம்  உருவாகிறது  என்றாரவர்.