சைட் அலி: 1எம்டிபி விவகாரத்தில் முகைதினுடன் ஒத்துப் போகிறேன்

syedசெராஸ்  அம்னோ தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி,   1எம்டிபி  விவகாரத்தில்  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கொண்டுள்ள  கவலையைத்  தாமும்  பகிர்ந்து  கொள்வதாகக்  கூறினார்.

“1எம்டிபி  விவகாரத்துக்குத்  தீர்வு  காணாவிட்டால்  அது  அம்னோவுக்கும்  பிஎன்னுக்கும்  சுமையாகிவிடும்  என  முகைதின்  கூறியதை  நானும்  ஒத்துக்கொள்கிறேன்”, என்றாரவர்.

“1எம்டிபி  எல்லா  வயதினராலும்  பேசப்படும்  விவகாரமாக  மாறியிருப்பதால்  அதை  இனியும்  கட்டுப்படுத்தி  வைக்க  முடியாது”, என  சைட்  அலி  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டிருந்தார்.

1எம்டிபி-க்குத்  தீர்வு  காணாவிட்டால், அடுத்த  பொதுத்  தேர்தலில் அம்னோவினதும்  பிஎன்னினதும்  எதிர்காலமே  ஆபத்துக்குள்ளாகும்  என்றாரவர்.