பெர்சே 4.0 பேரணி நஜிப் பதவி விலகக் கோரிக்கை விடுக்கும்

bersihபெர்சே,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  மூன்று  மாநகரங்களில்  மிகப்  பெரிய  அளவில்  பேரணி  நடத்தத்  திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட்  29-30 இரவில்  நடத்தப்படும்  அப்பேரணி  நிறுவனப்பூர்வமான  சீரமைப்புகள்  உள்பட, நான்கு  கோரிக்கைகளைக்  கொண்டிருக்கும்.

அப்பேரணி  கோலாலும்பூர்,  கூச்சிங்,  கோட்டா  கினாபாலு  ஆகிய  நகரங்களில்  நடைபெறும்  என  பெர்சே  இன்று வெளியிட்ட  அறிக்கை  ஒன்று  கூறியது.