‘நஜிப்பைக் கைது செய்’ என்று கூறும் குரல் என்னுடையது அல்ல: மந்திரி புசார் மறுப்பு

mb nsநெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசான்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கைது  செய்ய  வேண்டுமென்று  தாம்  ஒரு  போதும்  சொன்னதில்லை  என்று  மறுத்திருக்கிறார்.

சுவாரா  டிவி-இல்   ஒலிக்கும்   குரல்  தம்முடையது  அல்ல  என்றாரவர்.

“சமூக  ஊடகங்களில்  வலம் வந்து  கொண்டிருக்கும்  அந்தக்  குரல்  என்னுடையது  எனச்  சில  தரப்பினர்  சுமத்தும்  ஆதாரமற்ற  குற்றச்சாட்டை  வன்மையாக  மறுக்கிறேன்.

“எனக்கும்  அந்த  ஒலிப்பதிவுக்கும்  அந்த  ஒலிப்பதிவில்  பேசும்  மனிதருக்கும்   சம்பந்தமே  இல்லை  என்பதை  வலியுறுத்துகிறேன்”,  என  ஹசான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அந்த  ஒலிப்பதிவில்  ஒரு  மனிதர் 1எம்டிபி  விவகாரத்தில் முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினை  ஆதரித்துப்  பேசுகிறார்.

“முகைதின்  செராஸில்  பேசியது  சரியே. குற்றவாளிகளை  அல்லது  சந்தேகத்துக்கு  உரியவர்களை  ஏன்  கைது  செய்யவில்லை  என  முகைதின்  வினவினார்.

“குற்றமற்றவர்களைக்  கைது  செய்தார்கள். இதற்கு  நஜிப்தான்  பொறுப்பு. எனவே, நஜிப்பைக்  கைது செய்வீர்”, என  அந்த  ஒலிப்பதிவில்  கூறப்பட்டிருந்தது.