விடுப்பில் செல்வீர்: பிரதமருக்கு லாபிஸ் அம்னோ கோரிக்கை

labisஜோகூர்  லாபிஸ்  அம்னோ  இளைஞர்  பகுதி,  1எம்டிபி  சிறப்புப்  பணிக்குழு  அதன்  பணியை  இடையூறின்றிச்  செய்வதற்கு  வசதியாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  விடுப்பில்  செல்ல  வேண்டுமென  வலியுறுத்தியுள்ளது.

நஜிப்,  பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர்கள்  நால்வரை அமைச்சரவையில்  இழுத்துப்  போட்டுக்  கொண்டு  அப்துல்  கனி  பட்டேலைச்  சட்டத்துறைத்  தலைவர்  பதவியிலிருந்து  தூக்கியதையும்  அடுத்து  மக்களுக்குப்  பணிக்குழு  மீதிருந்த  நம்பிக்கை  போய்விட்டது  என்றது  கூறியது.

“இப்படிப்பட்ட  சூழலில்  மக்களுக்கு  விசாரணைமீது  எதிர்மறையான  எண்ணம்தான்  தோன்றுகிறது.

“விசாரணையில்  ஒளிவுமறைவு  இல்லை  என்பதை  உறுதிப்படுத்தவும்  விசாரணை  சுமூகமாக  நடப்பதற்கும்  பிரதமர்  விடுப்பில்  செல்ல  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறோம்”, என  அப்பகுதி  வெளியிட்ட  அறிக்கை  கூறியது.