ஸெட்டிக்கு மாரடைப்பா? இல்லை என்கிறது பேங்க் நெகரா

zetiபேங்க் நெகாரா  அதன்  கவர்னர்  ஸெட்டி  அக்டார்  அசீஸுக்கு  மாரடைப்பு  ஏற்பட்டதாகக்  கூறப்படுவதை  மறுத்ததாக  ஏஸ்ட்ரோ  அவானி  அறிவித்துள்ளது.

ஸெட்டி  மருத்துவ  மனையில்  சேர்க்கப்பட்டதாகக்  கூறும்  செய்தியை  மத்திய  வங்கியின்  பேச்சாளர்  ஒருவர்  நிராகரித்தார்.

ஸெட்டி  எப்போதும்போல்  அலுவலகத்தில்  வேலை  செய்து  கொண்டிருப்பதாக  அவர்  தெரிவித்தார்.

1எம்டிபிமீது  விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழுவில்  ஒருவரான  ஸெட்டி  அதிலிருந்து  விலகிக்  கொண்டிருப்பதாகவும்  பேச்சு  அடிபடுகிறது.

ஆனால்,  அதுவும்  பொய்யான  செய்தி  என்று  தெரிகிறது.