எதிர்க்கப்போவதில்லை என்பதைக் கண்ணீர் நீர் மல்கக் கூறினார் முகைதின்

tear“கட்சியை   மிகவும்  நேசிக்கிறேன். அதனால்  எதிர்த்துப்  போராட  மாட்டேன்”,  என  முன்னாள்  துணைப்  பிரதமர்   முகைதின்  யாசின்  கூறினார்.

பாகோ பிஎன் தொகுதித்  தலைவர்களிடையே  பேசியபோது  முகைதின்  அவ்வாறு  கூறியதாக  சைனா  பிரஸ்  அறிவித்துள்ளது.

அனைவரும்  கட்சியின்  நலனுக்கே  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என  வலியுறுத்திய  அம்னோ  துணைத்  தலைவருமான  முகைதின்,  தாம்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்டதற்காக  யாரும்  உணர்ச்சிவசப்படக்கூடாது  என்றும்  கேட்டுக்கொண்டார்.

அது கட்சிக்கும்  நாட்டுக்கும்  நல்லதல்ல.

தாம்  வெளியேற்றப்பட்டதை  எண்ணித்  தம் குடும்பத்தார் மிகவும்  ஒடிந்து  போனார்கள்  என்றவர் கூறினார். அதைச்  சொல்லியபோது  அந்த  68-வயது  அரசியல்  தலைவரால்  கண்ணீரைக்  கட்டுப்படுத்த இயலவில்லை  என சைனா  பிரஸ்  கூறிற்று.

பாகோ  அம்னோ  தொகுதி  அலுவலகத்தில்  நடைபெற்ற  அக்கூட்டத்தில்  மசீச,  மஇகா  தலைவர்கள்  உள்பட  சுமார்  800 பேர்  கலந்து  கொண்டனர்.